Translate

Saturday, 8 June 2013

Best Of Rangolis









Craft Ideas































Laughter the best medicine

வலைத் தளத்தில் இன்று படித்து சிரித்தது... படித்துப் பாருங்கள். கட்டாயம் பிடிக்கும்... ”என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா?” “ஆமாம்; காமராஜ் சிலைக்கு நீ சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு” “தாடி, கைத்தடியா? எந்த ரூட்ல வந்தே?” “ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா?” “ப்ச்.. ரூட்டைச் சொல்லு” “அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னே இல்லே?” “ஆமாம்” “கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்” “ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே?” “கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தோம்” “தப்பு பண்ணிட்டியே” “என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா?” “நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா?” “நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்?” “ஐய்ய்யோ…. சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே?” “பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னே?” “அது நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..” “தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே?” “என்ன உளர்ரே?” “ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே?” “முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே?” “இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீ சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்” “ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு” “போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இரு…. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு” “தெருப் பேராத்தான் இருக்கும். படி” “இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்” “ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு” “ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..” “நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா” “இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…” “அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா” “ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு” “அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே” “பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே?” “அந்தத் தெரு பேரே அதாண்டா. சரி. அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு” “ஆச்சு.. சொல்லு” “இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா.” “வந்தாச்சு” “வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்.” “அமல…..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே” “அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு” “ஆச்சு” “என்ன தெரியுது?” “பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது” “அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்” “அவங்க திருப்பி அடிப்பாங்களே?” “நான் உன்னைச் சொன்னேன்” “என்னை ஏன் பொண்டாட்டின்னு சொன்னே? அவனா நீயி?” “மூடிகிட்டு அவங்க பின்னால பாரு…” “போ மாப்ளே.. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே?” “டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா?” “இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உன் பொண்டாட்டிதானா? பாக்கக் கூடாதா?” “டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே?” “பாண்டிச்சேரியா? நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்?” “விழுப்புறமா.. அங்கே ஏன் போனே?” “நீதான திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணும்ன்னே?” “அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா” “ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது?” “என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ” “போயி?” “உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை... - ஜகவர்

Tuesday, 4 June 2013

Tips for a Normal Delivery

சுகப் பிரசவத்திற்கு சில "டிப்ஸ்!'

கடலூரைச் சேர்ந்த மூலிகை வைத்தியர் அன்னமேரி: கர்ப்பமான நாள் முதல்,பிரசவமாகும் நாள் வரைக்கும், முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து, "சூப்' வைத்து சாப்பிட்டால், சுகப் பிரசவ மாகும். வாயு அதிகம் உள்ள வாழைக்காய், உருளைக் கிழங்கு, இறால் மீன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது.
கருத்தரித்த மூன்றாவது மாதம் முதல்,பிரசவமாகும் வரை, வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி இரண்டு ஸ்பூன் உடைத்து போட்டு கஞ்சியாக காய்ச்சி, பால் சேர்த்து, மூன்று நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால், சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும்.
ஐந்தாவது மாதம் முதல், எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதி நீரில் கலந்து, காலை அல்லது மதிய வேளையில் சாப்பிடலாம். ஏழாவது மாதத்திற்குப் பின், வடகத்தை பொரித்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து அரை டம்ளரானதும், குடிக்கலாம். இதை வாரத்தில் இரண்டு நாள் செய்தால், சுகப் பிரசவமாகும்.
கர்ப்ப காலங்களில் சிலருக்கு, கை - கால் வீக்கம் வரும். இதற்கு நெல்லிக்காய், முருங்கைக் காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தைசட்டியில் போட்டு வறுத்து, வெடித்ததும், தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். 10 குப்பைமேனி இலையை மென்று, சாப்பிடலாம்; இதெல்லாம் வீக்கத்தை வடித்துவிடும்.
பிரவச நாள் நெருங்கியதும், சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்போது, ஐந்து வெற்றிலை, ஒரு ஸ்பூன் ஓமம், மூன்று பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து, அது வெடித்ததும், நசுக்கிய பூண்டு, பிய்த்துப் போட்ட வெற்றிலையுடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, முக்கால் டம்ளரானதும், எலுமிச்சை அளவு வெண்ணெய் அல்லது பனை வெல்லத்தை சேர்த்துக் குடித்தால், சாதாரண வலியாக இருந்தால் நின்றுவிடும்.
வலி தொடர்ந்தால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் இருந்தே உணவில் சில வரைமுறைகளைக் கடைபிடித்தால், தாய் - சேய் நலம் சீராக இருப்பதுடன், அது சுகப் பிரசவத்திற்கும் வழி வகுக்கும்.


நன்றி - தினமலர்